அறம்
சரக் சரக்கென்று அவசர அவசரமாக சவரம் செய்து கொண்டிருக்கிற கணவன் ஜேம்ஸ்ஸையும் சொர் என்று கொட்டுகிற நீரையும் பார்த்த மேரிக்கு மனசெல்லாம் ஆதங்கம்.
"என்னங்க... 8 மணி ஆகப்போவுது இன்னும் பாத்ரூம்ல என்ன பண்ணுறீங்க... ஷேவிங் பண்ணும் போது தண்ணிய திறந்து விடாதீங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஒண்ணு தேவைப்படும் போது திறங்க இல்ல கப்புல தண்ணி பிடிச்சி வச்சிட்டு பண்ணுங்க..."
"சரி சரி அடைச்சிட்டேன் ஆரோன் எங்க போயிருக்கான்?" என்று குளியல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து தன் மனைவி மேரியிடம் கேட்டார் ஜேம்ஸ்.
"பெத்தேல் இல்லத்துக்கு போயிருக்கான் அந்த பிள்ளைகள பார்த்துட்டு பள்ளிக்கூடம் போகும் முன்ன சொல்லிட்டு வரேன்னு போனான்..."
"ம்ம்ம்... இவன் இல்லைனா அந்த பிள்ளைங்க ரொம்ப தவிச்சி போயிடும்க..."
வீட்டின் முன்னே வண்டிச் சத்தம் கேட்டதும் வாசலை நோக்கி ஓடினாள் மேரி.
"காலையில் இருந்து காலில் சக்கரம் கட்டிட்டு திரியுற பைய்யாப் போ"
"என்னப்பா எல்லோர்கிட்டையும் சொல்லிட்டியா?"
"சொல்லிட்டேன்மா... எல்லோர் கிட்டயும் சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க கஷ்டமா போயிட்டுமா.."
"நேத்தே சர்ச்ல வச்சி சொல்லிட்டதான மறுபடியும் ஏன்? சரி விடு எலிசபெத் சிஸ்டர் என்ன சொன்னாங்க...?
"எல்லோருக்கும் அரசாங்க வேலை எளிதா கிடைக்காது உனக்கு இந்த சின்ன வயசுல பல தேர்வு எழுதி கிடைச்ச வேலை இது... நல்லபடியா பொறுப்பா பாருன்னு சொன்னாங்க..."
"ம்ம்ம்... நீதான் உங்க கட்சி மூலமா சிபாரிசு பண்ணுன நல்ல நல்ல வேலைய எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்ட..."
"எனக்கு முன்னாடி காத்து இருக்குறவங்கள ஏமாத்தி பணம், சிபாரிசுன்னு வாங்குற வேலை எனக்கு வேண்டாம்."
"சரிடா இவ்வளவு நாள் கிடைச்ச வேலை எல்லாம் சம்பளம் கம்மினாலும் செஞ்ச... வேலை பார்த்துட்டே எத்தனையோ எக்ஸாம் எழுதி இந்த வேலை கிடைச்சி இருக்கு... என்ன வேலை பார்த்தாலும் அதுல பாதி பெத்தேல் ஹோமுக்கு குடுத்து, சனி ஞாயிறுல அங்க முடிந்த வேலை எல்லாம் செஞ்ச..."
"சரிம்மா... சனி ஞாயிறு முடிந்தால் வரேன் புதன் கிழமை ஞானமலர் பெட்ரோல் பல்க் ஓனர் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் குடுப்பாங்க வாங்கி பெத்தேல் ஹோம்க்கு ஆட்டோவில் குடுத்து விடுங்க."
"அதெல்லாம் நாங்க பார்த்துகிடுறோம்பா... நீ கவலைப்படாத அந்த அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் தான் நீ இல்லாம கஷ்டப்படும்."
"அத ஏன் இப்ப அவனுக்கு நியாபகப்படுத்துற? நீ கிளம்புப்பா... நான் பார்த்துக்கிடுறேன்." குளித்து விட்டு வந்தவர் ஆரோனை கிளப்பினார்.
அம்மா அழுது வழி அனுப்பி வைக்க அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து புற நகர் பேருந்து நிலையதில் இறங்கினான் ஆரோன்.
"கவனமா வேலை பாருப்பா... வேலையில் நேர்மையா, நியாயமா இருந்து நல்ல பேர் எடுக்கணும். நேரம் கிடைக்கும் போது போன் பண்ணிப் பேசு லீவுக்கு முடிந்தால் வந்துட்டுப் போப்பா..." பேருந்து கிளம்பவே வேகமாக கீழே இறங்கி கை காட்டி அனுப்பி வைத்தார்.
திருச்சி வந்து இறங்கியதும் வரவேற்றான் லியோ.
"சாயங்காலம் கிளம்பி வர சொல்லி இருப்பேன் உன்னோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற ஒருத்தர் லீவுக்கு போறாரு அதான் அவரு போகும் முன்ன உன்ன பார்க்கணும்னு சொல்லவும் தான் காலையிலையே வரச் சொன்னேன்"
"ஏன் மாமா அவர் ஏன் என்ன பார்க்கணும்?"
"அவர் லீவுல போறாருடா போகும் முன்ன வேலையப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு தான்டா வரச் சொல்லி இருக்காரு..." ஆட்டோ ஒன்றில் ஏறி "மாருதி நகர்" என்று சொல்லி ஆரோனை ஏறச் சொல்லி அமர்ந்து கொண்டான்.
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகம் வேலை ஒப்பந்தம் சம்பந்தமான உத்தரவு கடிதம் காட்டி விட்டு மேலாளர் அறையை விட்டு வெளியே வந்தவனை அழைத்து இருக்கையில் உட்கார வைத்தார் பெருமாள்சாமி. நடுத்தர வயதுக்காரர் ஆனாலும் அரோனிடம் மிகவும் நட்பாகப் பேசினார்.
"இந்த மாதிரி புதுசா வேலைக்கு வரவங்கள ஒரு சீட்டுல நிரந்தரமா உட்கார விட மாட்டாங்க... அப்படி உட்கார இரண்டு மூணு வருசம் ஆகும், நீங்க குடுத்து வச்சவங்க தம்பி. இதுக்கு முன்ன இந்த சீட்ல இருந்தவரு ரிட்டையர் ஆகிட்டாரு... நான் மெடிக்கல் லீவுல போறேன் வரும் வரை எந்த பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கோங்க தம்பி உங்கள ஒரே சீட்ல உடகார வைக்க வேண்டியது என் பொறுப்பு."
நாலைந்து நாட்கள் வரை அரோனுக்கு என்ன வேலை செய்வது, யார் மேலதிகாரி இப்படி ஒன்றும் விளங்கவில்லை... எந்த கோப்புகளும் இவனிடம் அவ்வளவாக வரவில்லை. எப்போதாவது பெயர், முகவரி சரி பார்க்கச் சொல்லி மேஜைக்கு வரும் கோப்புக்களை மட்டும் உண்மையான ஆவணங்களை வைத்து சரி பார்த்த்துக் கொண்டிருந்தான்.
விடுமுறையில் இருந்து திரும்பி வந்த பெருமாள்சாமி அவனைத் மேலதிகாரி அழைப்பதாக சொல்லவும் அறைக்கு சென்று சந்தித்தான் அழைத்து வேலையைப் பற்றி விசாரித்து விட்டு 'பெருமாள்சாமி உங்களைப் பற்றி நல்லவிதமா சொல்லி இருக்காரு... இனிமேல் என்னோட இலாகாவில் பணி ஆற்றலாம்' என்று கூறினார். அப்போது அங்கே வந்த பியூனிடம்,
"கதிரவா... இனிமே சார் என்னோட டிப்பார்ட்மெண்ட்ல தான் நிரந்தரமா இருக்கப் போறாரு நல்லபடியா பாத்துக்க" என்றார்.
அன்றைக்கும் கூட எந்த கோப்பும் அவன் மேஜைக்கு வரவில்லை. மாலையில் கதிரவன் எல்லோருக்கும் தேநீர், காப்பியுடன், கையில் பொட்டலம் ஒன்று கொடுத்து கொண்டு வந்தான். ஆரோனின் மேஜை அருகே வந்ததும் டீயை வைத்து விட்டு கையில் இருந்த காகித்தைப் பார்த்து விட்டு அவன் கையில் ஒரு பொட்டலத்தை குடுத்தான்.
"நான் வடை சாப்பிட மாட்டேன் வேண்டாம்." என்றான் அரோன்.
"கதிரவன் சிரித்து விட்டு அதான் தெரியுமே சார் இது சுவீட்! பெருமாள்சாமி சார் டிபார்மெண்ட்ல தான வேலை செய்யுறீங்க?"
"ஆமா அதுக்கு என்ன?"
"அப்ப பிடிங்க சார் நான் எல்லோருக்கும் சுவீட் கொடுக்கணும் நீங்க பெருமாள்சாமி சார் கிட்ட கேட்டுக்கோங்க..." என்று கூறிவிட்டு மற்ற மேஜைகளை நோக்கி போய் விட்டான்.
பொட்டலத்தைப் பிரித்தவன் அதிர்ச்சி அடைந்தான்.
"என்ன சார் இது சுவீட்ன்னு சொல்லி இத கையில் குடுத்துட்டு போறாரு..."என்றான் அரோன் பெருமாள்சாமியிடம்.
"வார்க்கடைசி நாள் தான அதான் சுவீட்" என்றார் சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் பொட்டலம் இருந்தது.
"இது சுவீட்டா?"
"தம்பி. ஒண்ணு புரிஞ்சிக்கோங்க.. நூத்துக் கணக்குல ஆட்கள் வந்து போற ஆபிஸ் இது, தினமும் சுவீட் கொடுக்க முடியாது. வாரக்கடைசியில் ஜீனியர் , ஜுனியர் பார்த்து சுவீட் வரும். நீங்க வேலைக்குப் புதுசுங்கறதினால உங்களுக்குச் சின்ன பொட்டலம். போகப் போக சுவீட் பாக்ஸ் பெருசாகும்.
"சார் அதுக்கு இப்படியா ஒவ்வொரு டேபிளா டீ கூட சேர்த்து..."
"அதுக்கு என்ன ஆபிஸ்ல இப்ப நாம மட்டும் தான இருக்கோம்."
"சார் நான் இப்ப வரை எந்த வேலையும் பார்க்கலையே?"
"அதனால என்ன ஒனக்கு பங்கு குடுக்க சொல்லி நம்ம ஆஃபீஸர் ஆர்டர் போட்டு இருப்பாரு!"
"ஓகோ! இதுக்குத்தான் காலையில் கதிரவன் கிட்ட என்னை நல்லா பாத்துக்க சொன்னாரு போல..."
எல்லோருக்கும் பொட்டலம் குடுத்து விட்டு வந்த கதிரவனை அரோன் கூப்பிட்டான்.
"அண்ணே! கதிரவன் அண்ணே... கொஞ்சம் இப்படி வாரீயளா?"
"என்ன சார்? பொட்டலம் சிறுசா இருக்கா? அதப் பத்தி உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க கிட்ட கேளுங்க..."
"பொட்டலம் எல்லாம் பெரிய பொட்டலம் தான். எனக்கு வேண்டாம். இப்ப இல்ல எப்பவும் வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.
"சார் என்ன சொல்லுறீங்க?"அவசரப்படாதீங்க சார்" என்றான் கதிரவன்.
"இங்க பணம் இல்லானா எந்த வேலையுமே நடக்காது தம்பி. பணம் குடுக்காமலும் இருக்க மாட்டாங்க... நீங்க யார்கிட்டேயும் கை நீட்டி பணம் வாங்கப்போறதில்ல, யாரோ தினமும் வாங்கி வைக்கிறாங்க வாரக்கடைசியில் உங்க கைக்கு வருது... அப்புறம் உங்களுக்கு இதுல என்ன தம்பி பிரச்சினை? இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு பணம் வாங்க மாட்டேன்னு சொல்லுறீங்களே நல்லா யோசித்து முடிவு எடுங்க தம்பி" என்றார் பெருமாள்சாமி.
"நான் எங்க இருந்தாலும் சரி என்ன வேலை பார்த்தாலும் சரி நான் மாற மாட்டேன். எப்போதும் நேர்மையாத்தான் இருக்கனும்னு என் அப்பாவும் ஆசிரியரும் கத்துக் கொடுத்து இருக்காங்க என்றான் அரோன்.
குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்:
நாம் செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
அறம்
சரக் சரக்கென்று அவசர அவசரமாக சவரம் செய்து கொண்டிருக்கிற கணவன் ஜேம்ஸ்ஸையும் சொர் என்று கொட்டுகிற நீரையும் பார்த்த மேரிக்கு மனசெல்லாம் ஆதங்கம்.
"என்னங்க... 8 மணி ஆகப்போவுது இன்னும் பாத்ரூம்ல என்ன பண்ணுறீங்க... ஷேவிங் பண்ணும் போது தண்ணிய திறந்து விடாதீங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஒண்ணு தேவைப்படும் போது திறங்க இல்ல கப்புல தண்ணி பிடிச்சி வச்சிட்டு பண்ணுங்க..."
"சரி சரி அடைச்சிட்டேன் ஆரோன் எங்க போயிருக்கான்?" என்று குளியல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து தன் மனைவி மேரியிடம் கேட்டார் ஜேம்ஸ்.
"பெத்தேல் இல்லத்துக்கு போயிருக்கான் அந்த பிள்ளைகள பார்த்துட்டு பள்ளிக்கூடம் போகும் முன்ன சொல்லிட்டு வரேன்னு போனான்..."
"ம்ம்ம்... இவன் இல்லைனா அந்த பிள்ளைங்க ரொம்ப தவிச்சி போயிடும்க..."
வீட்டின் முன்னே வண்டிச் சத்தம் கேட்டதும் வாசலை நோக்கி ஓடினாள் மேரி.
"காலையில் இருந்து காலில் சக்கரம் கட்டிட்டு திரியுற பைய்யாப் போ"
"என்னப்பா எல்லோர்கிட்டையும் சொல்லிட்டியா?"
"சொல்லிட்டேன்மா... எல்லோர் கிட்டயும் சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க கஷ்டமா போயிட்டுமா.."
"நேத்தே சர்ச்ல வச்சி சொல்லிட்டதான மறுபடியும் ஏன்? சரி விடு எலிசபெத் சிஸ்டர் என்ன சொன்னாங்க...?
"எல்லோருக்கும் அரசாங்க வேலை எளிதா கிடைக்காது உனக்கு இந்த சின்ன வயசுல பல தேர்வு எழுதி கிடைச்ச வேலை இது... நல்லபடியா பொறுப்பா பாருன்னு சொன்னாங்க..."
"ம்ம்ம்... நீதான் உங்க கட்சி மூலமா சிபாரிசு பண்ணுன நல்ல நல்ல வேலைய எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்ட..."
"எனக்கு முன்னாடி காத்து இருக்குறவங்கள ஏமாத்தி பணம், சிபாரிசுன்னு வாங்குற வேலை எனக்கு வேண்டாம்."
"சரிடா இவ்வளவு நாள் கிடைச்ச வேலை எல்லாம் சம்பளம் கம்மினாலும் செஞ்ச... வேலை பார்த்துட்டே எத்தனையோ எக்ஸாம் எழுதி இந்த வேலை கிடைச்சி இருக்கு... என்ன வேலை பார்த்தாலும் அதுல பாதி பெத்தேல் ஹோமுக்கு குடுத்து, சனி ஞாயிறுல அங்க முடிந்த வேலை எல்லாம் செஞ்ச..."
"சரிம்மா... சனி ஞாயிறு முடிந்தால் வரேன் புதன் கிழமை ஞானமலர் பெட்ரோல் பல்க் ஓனர் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் குடுப்பாங்க வாங்கி பெத்தேல் ஹோம்க்கு ஆட்டோவில் குடுத்து விடுங்க."
"அதெல்லாம் நாங்க பார்த்துகிடுறோம்பா... நீ கவலைப்படாத அந்த அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் தான் நீ இல்லாம கஷ்டப்படும்."
"அத ஏன் இப்ப அவனுக்கு நியாபகப்படுத்துற? நீ கிளம்புப்பா... நான் பார்த்துக்கிடுறேன்." குளித்து விட்டு வந்தவர் ஆரோனை கிளப்பினார்.
அம்மா அழுது வழி அனுப்பி வைக்க அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து புற நகர் பேருந்து நிலையதில் இறங்கினான் ஆரோன்.
"கவனமா வேலை பாருப்பா... வேலையில் நேர்மையா, நியாயமா இருந்து நல்ல பேர் எடுக்கணும். நேரம் கிடைக்கும் போது போன் பண்ணிப் பேசு லீவுக்கு முடிந்தால் வந்துட்டுப் போப்பா..." பேருந்து கிளம்பவே வேகமாக கீழே இறங்கி கை காட்டி அனுப்பி வைத்தார்.
திருச்சி வந்து இறங்கியதும் வரவேற்றான் லியோ.
"சாயங்காலம் கிளம்பி வர சொல்லி இருப்பேன் உன்னோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற ஒருத்தர் லீவுக்கு போறாரு அதான் அவரு போகும் முன்ன உன்ன பார்க்கணும்னு சொல்லவும் தான் காலையிலையே வரச் சொன்னேன்"
"ஏன் மாமா அவர் ஏன் என்ன பார்க்கணும்?"
"அவர் லீவுல போறாருடா போகும் முன்ன வேலையப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு தான்டா வரச் சொல்லி இருக்காரு..." ஆட்டோ ஒன்றில் ஏறி "மாருதி நகர்" என்று சொல்லி ஆரோனை ஏறச் சொல்லி அமர்ந்து கொண்டான்.
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகம் வேலை ஒப்பந்தம் சம்பந்தமான உத்தரவு கடிதம் காட்டி விட்டு மேலாளர் அறையை விட்டு வெளியே வந்தவனை அழைத்து இருக்கையில் உட்கார வைத்தார் பெருமாள்சாமி. நடுத்தர வயதுக்காரர் ஆனாலும் அரோனிடம் மிகவும் நட்பாகப் பேசினார்.
"இந்த மாதிரி புதுசா வேலைக்கு வரவங்கள ஒரு சீட்டுல நிரந்தரமா உட்கார விட மாட்டாங்க... அப்படி உட்கார இரண்டு மூணு வருசம் ஆகும், நீங்க குடுத்து வச்சவங்க தம்பி. இதுக்கு முன்ன இந்த சீட்ல இருந்தவரு ரிட்டையர் ஆகிட்டாரு... நான் மெடிக்கல் லீவுல போறேன் வரும் வரை எந்த பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கோங்க தம்பி உங்கள ஒரே சீட்ல உடகார வைக்க வேண்டியது என் பொறுப்பு."
நாலைந்து நாட்கள் வரை அரோனுக்கு என்ன வேலை செய்வது, யார் மேலதிகாரி இப்படி ஒன்றும் விளங்கவில்லை... எந்த கோப்புகளும் இவனிடம் அவ்வளவாக வரவில்லை. எப்போதாவது பெயர், முகவரி சரி பார்க்கச் சொல்லி மேஜைக்கு வரும் கோப்புக்களை மட்டும் உண்மையான ஆவணங்களை வைத்து சரி பார்த்த்துக் கொண்டிருந்தான்.
விடுமுறையில் இருந்து திரும்பி வந்த பெருமாள்சாமி அவனைத் மேலதிகாரி அழைப்பதாக சொல்லவும் அறைக்கு சென்று சந்தித்தான் அழைத்து வேலையைப் பற்றி விசாரித்து விட்டு 'பெருமாள்சாமி உங்களைப் பற்றி நல்லவிதமா சொல்லி இருக்காரு... இனிமேல் என்னோட இலாகாவில் பணி ஆற்றலாம்' என்று கூறினார். அப்போது அங்கே வந்த பியூனிடம்,
"கதிரவா... இனிமே சார் என்னோட டிப்பார்ட்மெண்ட்ல தான் நிரந்தரமா இருக்கப் போறாரு நல்லபடியா பாத்துக்க" என்றார்.
அன்றைக்கும் கூட எந்த கோப்பும் அவன் மேஜைக்கு வரவில்லை. மாலையில் கதிரவன் எல்லோருக்கும் தேநீர், காப்பியுடன், கையில் பொட்டலம் ஒன்று கொடுத்து கொண்டு வந்தான். ஆரோனின் மேஜை அருகே வந்ததும் டீயை வைத்து விட்டு கையில் இருந்த காகித்தைப் பார்த்து விட்டு அவன் கையில் ஒரு பொட்டலத்தை குடுத்தான்.
"நான் வடை சாப்பிட மாட்டேன் வேண்டாம்." என்றான் அரோன்.
"கதிரவன் சிரித்து விட்டு அதான் தெரியுமே சார் இது சுவீட்! பெருமாள்சாமி சார் டிபார்மெண்ட்ல தான வேலை செய்யுறீங்க?"
"ஆமா அதுக்கு என்ன?"
"அப்ப பிடிங்க சார் நான் எல்லோருக்கும் சுவீட் கொடுக்கணும் நீங்க பெருமாள்சாமி சார் கிட்ட கேட்டுக்கோங்க..." என்று கூறிவிட்டு மற்ற மேஜைகளை நோக்கி போய் விட்டான்.
பொட்டலத்தைப் பிரித்தவன் அதிர்ச்சி அடைந்தான்.
"என்ன சார் இது சுவீட்ன்னு சொல்லி இத கையில் குடுத்துட்டு போறாரு..."என்றான் அரோன் பெருமாள்சாமியிடம்.
"வார்க்கடைசி நாள் தான அதான் சுவீட்" என்றார் சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் பொட்டலம் இருந்தது.
"இது சுவீட்டா?"
"தம்பி. ஒண்ணு புரிஞ்சிக்கோங்க.. நூத்துக் கணக்குல ஆட்கள் வந்து போற ஆபிஸ் இது, தினமும் சுவீட் கொடுக்க முடியாது. வாரக்கடைசியில் ஜீனியர் , ஜுனியர் பார்த்து சுவீட் வரும். நீங்க வேலைக்குப் புதுசுங்கறதினால உங்களுக்குச் சின்ன பொட்டலம். போகப் போக சுவீட் பாக்ஸ் பெருசாகும்.
"சார் அதுக்கு இப்படியா ஒவ்வொரு டேபிளா டீ கூட சேர்த்து..."
"அதுக்கு என்ன ஆபிஸ்ல இப்ப நாம மட்டும் தான இருக்கோம்."
"சார் நான் இப்ப வரை எந்த வேலையும் பார்க்கலையே?"
"அதனால என்ன ஒனக்கு பங்கு குடுக்க சொல்லி நம்ம ஆஃபீஸர் ஆர்டர் போட்டு இருப்பாரு!"
"ஓகோ! இதுக்குத்தான் காலையில் கதிரவன் கிட்ட என்னை நல்லா பாத்துக்க சொன்னாரு போல..."
எல்லோருக்கும் பொட்டலம் குடுத்து விட்டு வந்த கதிரவனை அரோன் கூப்பிட்டான்.
"அண்ணே! கதிரவன் அண்ணே... கொஞ்சம் இப்படி வாரீயளா?"
"என்ன சார்? பொட்டலம் சிறுசா இருக்கா? அதப் பத்தி உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க கிட்ட கேளுங்க..."
"பொட்டலம் எல்லாம் பெரிய பொட்டலம் தான். எனக்கு வேண்டாம். இப்ப இல்ல எப்பவும் வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.
"சார் என்ன சொல்லுறீங்க?"அவசரப்படாதீங்க சார்" என்றான் கதிரவன்.
"இங்க பணம் இல்லானா எந்த வேலையுமே நடக்காது தம்பி. பணம் குடுக்காமலும் இருக்க மாட்டாங்க... நீங்க யார்கிட்டேயும் கை நீட்டி பணம் வாங்கப்போறதில்ல, யாரோ தினமும் வாங்கி வைக்கிறாங்க வாரக்கடைசியில் உங்க கைக்கு வருது... அப்புறம் உங்களுக்கு இதுல என்ன தம்பி பிரச்சினை? இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு பணம் வாங்க மாட்டேன்னு சொல்லுறீங்களே நல்லா யோசித்து முடிவு எடுங்க தம்பி" என்றார் பெருமாள்சாமி.
"நான் எங்க இருந்தாலும் சரி என்ன வேலை பார்த்தாலும் சரி நான் மாற மாட்டேன். எப்போதும் நேர்மையாத்தான் இருக்கனும்னு என் அப்பாவும் ஆசிரியரும் கத்துக் கொடுத்து இருக்காங்க என்றான் அரோன்.
குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்:
நாம் செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
"என்னங்க... 8 மணி ஆகப்போவுது இன்னும் பாத்ரூம்ல என்ன பண்ணுறீங்க... ஷேவிங் பண்ணும் போது தண்ணிய திறந்து விடாதீங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஒண்ணு தேவைப்படும் போது திறங்க இல்ல கப்புல தண்ணி பிடிச்சி வச்சிட்டு பண்ணுங்க..."
"சரி சரி அடைச்சிட்டேன் ஆரோன் எங்க போயிருக்கான்?" என்று குளியல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து தன் மனைவி மேரியிடம் கேட்டார் ஜேம்ஸ்.
"பெத்தேல் இல்லத்துக்கு போயிருக்கான் அந்த பிள்ளைகள பார்த்துட்டு பள்ளிக்கூடம் போகும் முன்ன சொல்லிட்டு வரேன்னு போனான்..."
"ம்ம்ம்... இவன் இல்லைனா அந்த பிள்ளைங்க ரொம்ப தவிச்சி போயிடும்க..."
வீட்டின் முன்னே வண்டிச் சத்தம் கேட்டதும் வாசலை நோக்கி ஓடினாள் மேரி.
"காலையில் இருந்து காலில் சக்கரம் கட்டிட்டு திரியுற பைய்யாப் போ"
"என்னப்பா எல்லோர்கிட்டையும் சொல்லிட்டியா?"
"சொல்லிட்டேன்மா... எல்லோர் கிட்டயும் சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க கஷ்டமா போயிட்டுமா.."
"நேத்தே சர்ச்ல வச்சி சொல்லிட்டதான மறுபடியும் ஏன்? சரி விடு எலிசபெத் சிஸ்டர் என்ன சொன்னாங்க...?
"எல்லோருக்கும் அரசாங்க வேலை எளிதா கிடைக்காது உனக்கு இந்த சின்ன வயசுல பல தேர்வு எழுதி கிடைச்ச வேலை இது... நல்லபடியா பொறுப்பா பாருன்னு சொன்னாங்க..."
"ம்ம்ம்... நீதான் உங்க கட்சி மூலமா சிபாரிசு பண்ணுன நல்ல நல்ல வேலைய எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்ட..."
"எனக்கு முன்னாடி காத்து இருக்குறவங்கள ஏமாத்தி பணம், சிபாரிசுன்னு வாங்குற வேலை எனக்கு வேண்டாம்."
"சரிடா இவ்வளவு நாள் கிடைச்ச வேலை எல்லாம் சம்பளம் கம்மினாலும் செஞ்ச... வேலை பார்த்துட்டே எத்தனையோ எக்ஸாம் எழுதி இந்த வேலை கிடைச்சி இருக்கு... என்ன வேலை பார்த்தாலும் அதுல பாதி பெத்தேல் ஹோமுக்கு குடுத்து, சனி ஞாயிறுல அங்க முடிந்த வேலை எல்லாம் செஞ்ச..."
"சரிம்மா... சனி ஞாயிறு முடிந்தால் வரேன் புதன் கிழமை ஞானமலர் பெட்ரோல் பல்க் ஓனர் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் குடுப்பாங்க வாங்கி பெத்தேல் ஹோம்க்கு ஆட்டோவில் குடுத்து விடுங்க."
"அதெல்லாம் நாங்க பார்த்துகிடுறோம்பா... நீ கவலைப்படாத அந்த அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் தான் நீ இல்லாம கஷ்டப்படும்."
"அத ஏன் இப்ப அவனுக்கு நியாபகப்படுத்துற? நீ கிளம்புப்பா... நான் பார்த்துக்கிடுறேன்." குளித்து விட்டு வந்தவர் ஆரோனை கிளப்பினார்.
அம்மா அழுது வழி அனுப்பி வைக்க அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து புற நகர் பேருந்து நிலையதில் இறங்கினான் ஆரோன்.
"கவனமா வேலை பாருப்பா... வேலையில் நேர்மையா, நியாயமா இருந்து நல்ல பேர் எடுக்கணும். நேரம் கிடைக்கும் போது போன் பண்ணிப் பேசு லீவுக்கு முடிந்தால் வந்துட்டுப் போப்பா..." பேருந்து கிளம்பவே வேகமாக கீழே இறங்கி கை காட்டி அனுப்பி வைத்தார்.
திருச்சி வந்து இறங்கியதும் வரவேற்றான் லியோ.
"சாயங்காலம் கிளம்பி வர சொல்லி இருப்பேன் உன்னோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற ஒருத்தர் லீவுக்கு போறாரு அதான் அவரு போகும் முன்ன உன்ன பார்க்கணும்னு சொல்லவும் தான் காலையிலையே வரச் சொன்னேன்"
"ஏன் மாமா அவர் ஏன் என்ன பார்க்கணும்?"
"அவர் லீவுல போறாருடா போகும் முன்ன வேலையப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு தான்டா வரச் சொல்லி இருக்காரு..." ஆட்டோ ஒன்றில் ஏறி "மாருதி நகர்" என்று சொல்லி ஆரோனை ஏறச் சொல்லி அமர்ந்து கொண்டான்.
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகம் வேலை ஒப்பந்தம் சம்பந்தமான உத்தரவு கடிதம் காட்டி விட்டு மேலாளர் அறையை விட்டு வெளியே வந்தவனை அழைத்து இருக்கையில் உட்கார வைத்தார் பெருமாள்சாமி. நடுத்தர வயதுக்காரர் ஆனாலும் அரோனிடம் மிகவும் நட்பாகப் பேசினார்.
"இந்த மாதிரி புதுசா வேலைக்கு வரவங்கள ஒரு சீட்டுல நிரந்தரமா உட்கார விட மாட்டாங்க... அப்படி உட்கார இரண்டு மூணு வருசம் ஆகும், நீங்க குடுத்து வச்சவங்க தம்பி. இதுக்கு முன்ன இந்த சீட்ல இருந்தவரு ரிட்டையர் ஆகிட்டாரு... நான் மெடிக்கல் லீவுல போறேன் வரும் வரை எந்த பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கோங்க தம்பி உங்கள ஒரே சீட்ல உடகார வைக்க வேண்டியது என் பொறுப்பு."
நாலைந்து நாட்கள் வரை அரோனுக்கு என்ன வேலை செய்வது, யார் மேலதிகாரி இப்படி ஒன்றும் விளங்கவில்லை... எந்த கோப்புகளும் இவனிடம் அவ்வளவாக வரவில்லை. எப்போதாவது பெயர், முகவரி சரி பார்க்கச் சொல்லி மேஜைக்கு வரும் கோப்புக்களை மட்டும் உண்மையான ஆவணங்களை வைத்து சரி பார்த்த்துக் கொண்டிருந்தான்.
விடுமுறையில் இருந்து திரும்பி வந்த பெருமாள்சாமி அவனைத் மேலதிகாரி அழைப்பதாக சொல்லவும் அறைக்கு சென்று சந்தித்தான் அழைத்து வேலையைப் பற்றி விசாரித்து விட்டு 'பெருமாள்சாமி உங்களைப் பற்றி நல்லவிதமா சொல்லி இருக்காரு... இனிமேல் என்னோட இலாகாவில் பணி ஆற்றலாம்' என்று கூறினார். அப்போது அங்கே வந்த பியூனிடம்,
"கதிரவா... இனிமே சார் என்னோட டிப்பார்ட்மெண்ட்ல தான் நிரந்தரமா இருக்கப் போறாரு நல்லபடியா பாத்துக்க" என்றார்.
அன்றைக்கும் கூட எந்த கோப்பும் அவன் மேஜைக்கு வரவில்லை. மாலையில் கதிரவன் எல்லோருக்கும் தேநீர், காப்பியுடன், கையில் பொட்டலம் ஒன்று கொடுத்து கொண்டு வந்தான். ஆரோனின் மேஜை அருகே வந்ததும் டீயை வைத்து விட்டு கையில் இருந்த காகித்தைப் பார்த்து விட்டு அவன் கையில் ஒரு பொட்டலத்தை குடுத்தான்.
"நான் வடை சாப்பிட மாட்டேன் வேண்டாம்." என்றான் அரோன்.
"கதிரவன் சிரித்து விட்டு அதான் தெரியுமே சார் இது சுவீட்! பெருமாள்சாமி சார் டிபார்மெண்ட்ல தான வேலை செய்யுறீங்க?"
"ஆமா அதுக்கு என்ன?"
"அப்ப பிடிங்க சார் நான் எல்லோருக்கும் சுவீட் கொடுக்கணும் நீங்க பெருமாள்சாமி சார் கிட்ட கேட்டுக்கோங்க..." என்று கூறிவிட்டு மற்ற மேஜைகளை நோக்கி போய் விட்டான்.
பொட்டலத்தைப் பிரித்தவன் அதிர்ச்சி அடைந்தான்.
"என்ன சார் இது சுவீட்ன்னு சொல்லி இத கையில் குடுத்துட்டு போறாரு..."என்றான் அரோன் பெருமாள்சாமியிடம்.
"வார்க்கடைசி நாள் தான அதான் சுவீட்" என்றார் சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் பொட்டலம் இருந்தது.
"இது சுவீட்டா?"
"தம்பி. ஒண்ணு புரிஞ்சிக்கோங்க.. நூத்துக் கணக்குல ஆட்கள் வந்து போற ஆபிஸ் இது, தினமும் சுவீட் கொடுக்க முடியாது. வாரக்கடைசியில் ஜீனியர் , ஜுனியர் பார்த்து சுவீட் வரும். நீங்க வேலைக்குப் புதுசுங்கறதினால உங்களுக்குச் சின்ன பொட்டலம். போகப் போக சுவீட் பாக்ஸ் பெருசாகும்.
"சார் அதுக்கு இப்படியா ஒவ்வொரு டேபிளா டீ கூட சேர்த்து..."
"அதுக்கு என்ன ஆபிஸ்ல இப்ப நாம மட்டும் தான இருக்கோம்."
"சார் நான் இப்ப வரை எந்த வேலையும் பார்க்கலையே?"
"அதனால என்ன ஒனக்கு பங்கு குடுக்க சொல்லி நம்ம ஆஃபீஸர் ஆர்டர் போட்டு இருப்பாரு!"
"ஓகோ! இதுக்குத்தான் காலையில் கதிரவன் கிட்ட என்னை நல்லா பாத்துக்க சொன்னாரு போல..."
எல்லோருக்கும் பொட்டலம் குடுத்து விட்டு வந்த கதிரவனை அரோன் கூப்பிட்டான்.
"அண்ணே! கதிரவன் அண்ணே... கொஞ்சம் இப்படி வாரீயளா?"
"என்ன சார்? பொட்டலம் சிறுசா இருக்கா? அதப் பத்தி உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க கிட்ட கேளுங்க..."
"பொட்டலம் எல்லாம் பெரிய பொட்டலம் தான். எனக்கு வேண்டாம். இப்ப இல்ல எப்பவும் வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.
"சார் என்ன சொல்லுறீங்க?"அவசரப்படாதீங்க சார்" என்றான் கதிரவன்.
"இங்க பணம் இல்லானா எந்த வேலையுமே நடக்காது தம்பி. பணம் குடுக்காமலும் இருக்க மாட்டாங்க... நீங்க யார்கிட்டேயும் கை நீட்டி பணம் வாங்கப்போறதில்ல, யாரோ தினமும் வாங்கி வைக்கிறாங்க வாரக்கடைசியில் உங்க கைக்கு வருது... அப்புறம் உங்களுக்கு இதுல என்ன தம்பி பிரச்சினை? இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு பணம் வாங்க மாட்டேன்னு சொல்லுறீங்களே நல்லா யோசித்து முடிவு எடுங்க தம்பி" என்றார் பெருமாள்சாமி.
"நான் எங்க இருந்தாலும் சரி என்ன வேலை பார்த்தாலும் சரி நான் மாற மாட்டேன். எப்போதும் நேர்மையாத்தான் இருக்கனும்னு என் அப்பாவும் ஆசிரியரும் கத்துக் கொடுத்து இருக்காங்க என்றான் அரோன்.
குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்:
நாம் செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.